1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றிபெற வேண்டுமானால் நிதானமான பேச்சு, நிதானமான செயல்களைக் கைக்கொள்ளவேண்டும். தொழிலதிபர் கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலாளர்களை அனுசரித்துச் செல்லும் தொழிலதிபர்கள் ஏற்றம் பெறுவார்கள். கொள்முதல் சம்பந்தமாக வியாபாரிகள் வெளியூர்ப் பயணம் செல்வர். அதில் நல்ல லாபத்தையும் பெறுவர். அரசு ஊழியர்கள் உற்சாகத்துடன் கடமையைச் செய்வார்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். இந்த மாதம் வரவு- செலவுகளில் பற்றாக்குறை வராது. ஆனால் மிச்சம் ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. பிள்ளைகளின் தேவை களையும், படிப்பு செலவுகளையும் சரிக்கட்ட திட்ட மிட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். மாணவர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டு வார்கள். உயர்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். நண்பர்கள் சொல்வதை நம்பி செயல்படக்கூடாது. அவர்களோடு வாக்குவாதமும் கூடாது. அனைத்து செயல்களிலும் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றி காணும் மாதம். தூர தேசத்தி −ருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிரிகள் தொல்லை அகலும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

இந்த மாதம் நீங்கள் உடல்நிலையில் கவனம் கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் பழைய நிலுவைகளைப் பெறுவார்கள். வருமானத்திற்குக் குறைவில்லை. அதேசமயம் பிள்ளைகள்வழியில் கல்விச் செலவுகள் கூடும். குடும்பத்திற்குத் தேவையானவற்றைப் பூர்த்திசெய்வீர்கள். சொத்து சம்பந்தமாக இருந்துவரும் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிட்டும். உடன்பிறந்தவர்கள் தக்கசமயத்தில் தேடிவந்து உதவி செய்வார்கள். அரசியல் பிரமுகர்கள் நினைத்தபடி வெற்றிபெறுவார் கள். தொழிலிலிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். ஊழியர்கள் ஒற்றுமையால் உற்பத்தி கூடும். வியாபாரிகள், விற்பனையில் அதிக லாபம் காண்பார்கள். தொல்லை கொடுத்துவரும் வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலைப் பெறுவார்கள். மாணவர்களிடையே நண்பர்கள் வட்டம் விரிவடையும். இளைஞர் கள் வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். கலைத்தொழில் செய்வோர் ஏற்றம் பெறும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு வருமானத் திற்குப் பஞ்சமில்லை. பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகவும் சிறப்பாகவும் நடந்தேறும். உடல்நிலையில் சற்று கவனம்கொள்ளவேண்டும். மருத்துவச் செலவுகள் கூடும். குழந்தை பாக்கியமில்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரனாக அமையும். தாய்- தந்தையர்வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். இளைஞர்களுக்கு தகுந்த அரசுப்பதவி வரும். ஒருசிலருக்கு அரசு வேலைக்கான உத்தரவும் கிட்டும். வியாபாரிகள் புதிதாக வணிக வளாகம் தேர்வுசெய்வார்கள். வியாபார விருத்தியையும் அடைவார்கள். தொழிலதிபர்களுக்கு வெளிநாடுகளில் புதிய தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் பலவிதத்திலும் வெற்றிச்செய்தி களைக் கேட்பார்கள். திட்டமிட்டபடி காரியங்கள் கைகூடும். எதிரிகள்கூட உங்கள் நட்புறவைத் தேடிவருவார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியம் சிறப்பாக நடந்தேறும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குடும்பத்தில் குதூகலம் நிறைந்து விளங்கும் மாதம். கைவிட்டுப்போன பாக்கிகள், பொருள்கள் வந்துசேரும். இதுவரை இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். சகோதரரிடையே இருந்துவரும் ஒற்றுமையில்லாத நிலை சீராகும். இளைய சகோதரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி மாறுதலைக் காண்பார்கள். கணவன்- மனைவியிடையே கருத்தொற்றுமை நீடிக்கும். மாணவர்கள் உயர்படிப்புக்கான முயற்சிகளில் வெற்றிபெறுவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குகளை வாங்கிச் சேர்ப்பார்கள். லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் செய்த கொள்முதல் அத்தனையும் விற்பனையாகும். கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் லாபத்தைப் பெறுவார்கள். வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். தாய்- தந்தையருக்கு மருத்துவச் செலவு செய்யநேரலாம். பெண்கள் திட்டமிட்டபடி ஆன்மிக சுற்றுலா சென்றுவருவார்கள். எப்போதும் இருந்துவரும் பணத்தொல்லை நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

இந்த மாதம் குடும்பச் செலவுகள் கூடும். அதற்கேற்ற வரவுகளும் வந்துசேரும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் போடுவார்கள். புதிய தொழில் நிறுவனம் கட்ட முற்படுவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இதுவரை உங்களை வாட்டிவதைத்த மருத்துவச் செலவுகள் நீங்கும். பூர்வீக சொத்துகளில் இருந்துவரும் வில்லங்கங்கள் நீங்கும். பழைய நண்பர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளுக்கு திருமண விஷயத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். நல்ல வரன் வந்துசேரும். மாணவர்கள் உயர்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். குழந்தை பாக்கியமில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் புதிய அணுகு முறையைக் கையாள்வார்கள். அரசியல் வாதிகள் நினைத்தபடி வெற்றி காண்பார்கள். தூரதேசத்தி−ருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். மகான்களின் தரிசனம் கிட்டும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

ff

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வரவு- செலவுகளில் கவனத்துடன் செயல்பட்டால் கடன் தொல்லைகள் வராமல் தவிர்க்கலாம். இதுவரை உங்களைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்துவந்த மகன் வந்துசேர்வார். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளை சமாளிக்க வேண்டிவரும். அவர்களின் சதித்திட்டத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பிக்கவேண்டும். தொழிலதிபர்கள் மிகுந்த கவனத்துடன் தொழிலாளர் பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும். தொழிலாளி- முதலாளி பேதம் வராமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். திருமண மாகாத பெண்களுக்கு நல்ல வரன் வந்து சேரும். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப வேலை பெறுவார்கள். சிலருக்கு கண் சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பிள்ளைகள்வழியில் கூடுதல் செலவுகள் வரலாம், அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி மாறுதலையடையலாம். கடிதத் தொடர்புகள் நல்ல செய்திகளைக் கொண்டுவரும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

இது பெண்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய மாதம். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பெயரில் புதிய சொத்துகள் வாங்கமுடியும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். உயர்படிப்பிற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சிலருக்கு இதுவரை கிடைக்காம−ருந்த குலதெய்வ அருள் கிட்டும். மாமன், மைத்துனர் வழிகளில் இருந்துவரும் சிக்கல்கள் தீரும். "வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளைப் பெற்றோமே' என்று வருந்தும் பெற்றோர்களின் கவலை தீரும். பிள்ளைகள் தாய்- தந்தை சொல்கேட்டு நடப்பார்கள். காவல்துறை நடவடிக்கைகள் சாதகமாக அமையும். வியாபாரிகளிடையே போட்டி அதிகமிருந்தாலும் லாபத்தில் குறைவு வராது. தொழிலதிபர்கள் வெளிமாநிலம், வெளிநாட்டில் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று நல்ல லாபத்தையும் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். பணிச்சுமை குறையும். இந்த மாதம் தெய்வபக்தி கூடி, அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். கடிதத் தொடர்பில் எதிர்பார்த்த வேலை உத்தரவுகளைப் பெறலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் வந்துசேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். உங்களைப் பிரிந்து சென்ற தொழில் கூட்டாளிகள் வருந்தி, திருந்தி வந்துசேர்வார்கள். இதுவரை உங்கள் தொழிலுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் விலகிச்செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிள்ளைகள்வழியில் தடைப்பட்டு வந்த திருமணம் இனிதே நடக்கும். நல்ல வரனாக அமையும். வரவு- செலவில் நிதானமாக செயல்படவேண்டும். மாணவர்கள் உயர்படிப்புக்கான செலவுகள் கூடும். அரசு ஊழியர்களின் கனவு நனவாகும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். ஒருசிலருக்கு தடைப்பட்ட வேலை மீண்டும் வந்துசேரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். மருத்துவச் செலவு கள் குறையும். அரசியல் பிரமுகர்கள் வெற்றிபெற்று தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முக்கியமான நபர் களை சந்திப்பீர்கள். அதன்மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர் கள் புதிய பங்குகளை நல்ல லாபத்துக்கு வாங்குவார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று லாபமடைவார்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத பாக்கிகள் அனைத் தும் வசூலாகும். வியாபாரமும் பெருகி நல்ல லாபத்தைத் தரும். இதுவரை பிரிந்து வாழ்ந்த உறவினர்கள் வந்துசேர்வார்கள். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதலைப் பெறுவார்கள். வரவேண்டிய பழைய நிலுவைகள் தாமதமின்றி வந்துசேரும். அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். திருமணம் தடைப்பட்டு வந்த பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும். வயதான பெற்றோர்வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். பெண்களால் அதிக நன்மைகளை அடையலாம். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். தெய்வபக்தியால் எல்லா நன்மை களையும் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

செல்: 94871 68174